ஓம் குருவடி போற்றி!
குருவே சிவம் எனக்கூறும் வேதம்
குருவே சிவமெனக்கொள்வோர்க்கு
வருதுயர் யாவும் மலையாய்த்தோன்றி
வடிவில் கடுகாய் விரைந்தோடும்!
சிவ பக்தி நெறியைத் தமிழகத்தில் பரவச்செய்து , அடியார்கள் பலரை சிவத் தொண்டில் ஈடுபடுத்தி,அவர்தம் பிறவிக்கடன் செவ்வனே நிறைவேறச் செய்து, அவர்கள் வாழ்வில் அறமும்,சிவனருட் கடாட்சமும் பெறச் செய்த அருளாளர் , மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!
குருவின் திருவடி சரணம்!