வணக்கம்!
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை.
18-10-2014.
18-10-2014.
18-10-2014 , தமிழ் மாதம் ஐப்பசி 1 ஆம் தேதி தசமி திதி அன்று, மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை,காலை 11.30 மணிக்கு அரிமளம் ஸ்ரீகோடகநல்லூர்சுந்தர சுவாமிகள் அதிஷ்டானத்தில், மஹா அபிஷேக ஆராதனைகள் வெகுசிறப்பாக, அடியார் யாவருக்கும் அருள் அமுதம் அளித்துக்காக்கும் ஸ்ரீசித்தர் அருளால், ஆலய அர்ச்சகர் திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர் மூலம், செவ்வனே நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான அடியார்கள் குருபூஜையில் பங்கேற்று , சித்தர் சுவாமிகளை பிரார்த்து வணங்கினர்.
மதியம் ஆயிரக்கணக்கான அடியார்க்கு அன்ன தானம் வழங்கப்பெற்றது. அடியார் யாவரும் ஆர்வமுடன் அன்னதான கைங்கர்யத்தில் கலந்துகொண்டு குருபூஜை அன்னதான நிகழ்வை சிறப்புற நடத்திக்கொடுத்தனர்.
மாலையில் ஸ்ரீசுவாமிகளின் அதிஷ்டானத்தில், சித்தர் சுவாமிகளின் அடியார்களின் சீரிய பங்களிப்பில் ஆயிரக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. ஸ்ரீசுந்தர சித்தர் சுவாமிகளின் அருட்கோவில், தீப ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தது. மாலையிலும் அடியார்கள் அதிக அளவில் வந்து சித்தர் சுவாமிகளை தரிசித்து வணங்கினர்.
மேலும் ஆர்வமுடன் வந்த அடியார்கள், பல்வேறு தொலைக்காட்சியிலும் ,செய்தித்தாள்களிலும் ஸ்ரீசுந்தர சுவாமிகளின் குருபூஜை விழாக்காட்சிகளை வெளியிட செய்திகள் சேகரித்துச்சென்றனர்.
கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகளின் குருபூஜை நிகழ்வு இனிதே நடந்தேறியது.
மாலையில் ஸ்ரீசுவாமிகளின் அதிஷ்டானத்தில், சித்தர் சுவாமிகளின் அடியார்களின் சீரிய பங்களிப்பில் ஆயிரக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. ஸ்ரீசுந்தர சித்தர் சுவாமிகளின் அருட்கோவில், தீப ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தது. மாலையிலும் அடியார்கள் அதிக அளவில் வந்து சித்தர் சுவாமிகளை தரிசித்து வணங்கினர்.
மேலும் ஆர்வமுடன் வந்த அடியார்கள், பல்வேறு தொலைக்காட்சியிலும் ,செய்தித்தாள்களிலும் ஸ்ரீசுந்தர சுவாமிகளின் குருபூஜை விழாக்காட்சிகளை வெளியிட செய்திகள் சேகரித்துச்சென்றனர்.
கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகளின் குருபூஜை நிகழ்வு இனிதே நடந்தேறியது.
ஆன்ம நலமும் ஆற்றலும் அள்ளித்தரும் ஸ்ரீசுந்தர சுவாமிகள் திருவடி பணிகிறோம்.
கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி! போற்றி!!