Tuesday 31 December 2013


2014
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் இந்த ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும் தமிழர் பொன்னாள் தைப்பொங்கல் திருநாளுக்கு கட்டியம் கூறும் நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும் தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும், சிறப்பாகவும் அமைய, மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் பாதம் வணங்கி பிரார்த்திக்கிறோம்!

அன்பர் அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய  நல் வாழ்த்துக்கள்!

01-01-2014  அன்று ஸ்ரீசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அன்பர்கள் தரிசிக்க ,சிறப்புற நடைபெற்றது.


Monday 30 December 2013

சிறப்பு அபிஷேக ஆராதனை


ஆலய விசேஷ தினங்கள் :-





​நாளது 01-01-2014 ஆங்கில புத்தாண்டு தினத்தில் , ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.


அன்பர்கள் வருக! ஸ்ரீசுந்தர சுவாமிகள் அருள் பெருக!!

Sunday 29 December 2013

http://kodaganallursrisundaraswamigal.com/

வணக்கம்!

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகள் ஆலய புதிய இணையதளம் 



முந்தைய தளத்திலும் பதிவுகள் தொடரும்.

முந்தைய தள முகவரி:



நன்றி!




Thursday 26 December 2013

ஸ்ரீசுந்தரசுவாமிகள் குருபூஜை.

வணக்கம்!


நாளது  27-12-2013 அன்று, மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகள் குருபூஜை. காலை 11.30 மணிக்கு ஸ்ரீ சுவாமிகள் அதிஷ்டானத்தில், அபிஷேகம் ஆராதனை ,மதியம் அன்ன தானம் நடைபெறும். 

அன்பர் யாவரும் குருபூஜையில் கலந்துகொண்டு ஆன்ம நலமும் ஆற்றலும் பெற்றுய்ய ஸ்ரீ சுவாமிகள் திருவடி பணிகிறோம். கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி!

          
தொடர்புக்கு..

கோவிந்தராஜன் அர்ச்சகர்
ஆலய அர்ச்சகர்,
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம், அரிமளம்,புதுக்கோட்டை.

மொபைல் எண்: 0091 9944102996.

Wednesday 4 December 2013

குருவே சரணம்!


கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகள்  அவதார மகிமையை, அருள் வரலாற்றை  உலகெங்கிலும் உள்ள தமிழ் அன்பர்கள் கண்ணுற்று நலமும் வளமும்  பெறவும், குருவின் அருளினைப்பெற்றுய்யவும் இந்த  ப்ளாக் தளம் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறது. 

மேலும், குருவருளால், உருவான  இணையதள முகவரி கீழே.

இணைய முகவரி :   http://kodaganallursrisundaraswamigal.tk 

மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள் அதிஷ்டானத்தை நேரில் தரிசிக்க எண்ணும் வெளியூர் அன்பர்களுக்கு , இத்தளத்தில்  Contact us  பக்கத்தில் உள்ள ரோடு மேப், அவர்கள் பயணத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள் அருள் வரலாறு தனை வலைப்பதிவு செய்ய கருவியாக்கிய , குருவடி சரணம்! 

ஞானகுமாரன்.


Wednesday 6 November 2013

மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள்

மகான் கோடகநல்லூர்  ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் 
அருளைப்பெற்று 
அனைவரும் நலமுடன் வாழ்க!






புகைப்படங்கள் : Dr.தம்பிதுரை,புதுகை.

Monday 28 October 2013

29-10-2013 மஹா குருபூஜை

வணக்கம்!

            நாளைய தினம் 29-10-2013 காலை 11 மணியளவில், மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் மஹா குருபூஜை விழா விமரிசையாக நடைபெற உள்ளது!

அன்பர் யாவரும் மகா குருபூஜையில் கலந்துகொண்டு , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அருளாசியினைப் பெற, வேண்டுகிறோம்!

மஹா குரு பூஜை தினத்தில் சிறப்பு அபிஷேகம்,ஆராதனை மதியம் அன்ன தானம் நடைபெறும்.

தொடர்புக்கு..

கோவிந்தராஜன் அர்ச்சகர்
ஆலய அர்ச்சகர்,
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம், அரிமளம்,புதுக்கோட்டை,தமிழ்நாடு,இந்தியா.

மொபைல் எண்: 0091 9944102996.

Thursday 17 October 2013

மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை.

வணக்கம்!


மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை. 
29-10-2013






நாளது 29-10-2013 , தமிழ் மாதம் ஐப்பசி 12 ஆம் தேதி தசமி திதி அன்று,  மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை. காலை 11.30 மணிக்கு அரிமளம் ஸ்ரீ சுவாமிகள் அதிஷ்டானத்தில், மஹா அபிஷேகம் ஆராதனை சிறப்புற நடைபெறும்.


மதியம் அன்ன தானம் நடைபெறும். அடியார்கள் கலந்துகொண்டு ஆன்ம நலமும் ஆற்றலும் பெற்றுய்ய ஸ்ரீ சுவாமிகள் திருவடி பணிகிறோம். கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி!

* குறிப்பு:


                     வருகை தரும் அடியார்க்கும்,அன்பர்க்கும் மஹா  குருபூஜை தினத்தன்று அன்னதானம் ஆலய அர்ச்சகர் திரு.கோவிந்தராஜன் அவர்களால்,முன்னின்று சிறப்புற நடத்தப்பெறுகிறது.   மேலும்,பிரதி மாத குருபூஜையும்  இவ்வண்ணமே,அர்ச்சகர் அவர்களால் நடத்தபெறுகிறது , மேலும், அதிஷ்டானத்திற்கு, முதல் முறையாக  தரிசிக்க வரும் அன்பர் யாவருக்கும்   அன்ன தானம் அர்ச்சகர் அவர்களால், வழங்கப்படுகிறது.    

சிரமமான பொருளாதார  சூழலிலும்,அர்ச்சகர் அவர்கள் இந்தப் பணியை , இறை கடமை என செய்து வருகிறார்கள்.

எதிர்வரும் மஹா குருபூஜை அன்னதானம் , அவ்வண்ணமே, சிறப்புற 
நடைபெற நம்மால் இயன்ற  உதவி தனை , மளிகைப் பொருட்களாகவோ, பழங்களாகவோ, பூ  வகைகளாகவோ  அல்லது தம்மால் இயன்ற காணிக்கையாகவோ ஆலயத்திற்கு அளித்து , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசி பெற்று நலம் பெறுவோம்!

காணிக்கை அளித்தாலும் அளிக்க முடியா நிலையில் இருந்தாலும்  அன்பர்கள் யாவரும்  அவசியம் மஹா குருபூஜையில்  கலந்து கொண்டு , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசியினை பெற்று, நலம் பல பெற அன்புடன் அழைக்கின்றோம்!

தங்கள் தொடர்பிற்கு;

திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர் 

:கை பேசி: 99441 02996 *

இமெயில் : govindharajanarchagar@gmail.com 


* ஆலய பணிகளில் இருக்கும் போது , அர்ச்சகர் அவர்கள் மொபைலில் பேச  மாட்டார்,எனவே, அன்பர் யாவரும் , அவர் மொபைலை எடுக்காத சமயத்தில், message மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்!


  :

Saturday 12 October 2013

அனைவருக்கும்  உளங்கனிந்த விஜயதசமி , 
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!




Saturday 5 October 2013

கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருள் வரலாறு

கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருள் வரலாறு , சுவாமிகளின் திரு அவதார மகிமை பற்றிய தொடர் , சுவாமிகளின் திருவருளால்  விரைவில் ஆரம்பமாகிறது!. 

அன்பர் யாவரும் படித்துய்ய திருவுளம் வேண்டுகிறோம்!

கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் பதம் போற்றி!

Thursday 1 August 2013

மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் குருபூஜை

வணக்கம்!





இன்று 01-08-2013 மகான்கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் குருபூஜை. காலை 11.30 மணிக்கு ஸ்ரீ சுவாமிகள் அதிஷ்டானத்தில், அபிஷேகம் ஆராதனை ,மதியம் அன்ன தானம் நடைபெறும். அடியார்கள் கலந்துகொண்டு ஆன்ம நலமும் ஆற்றலும் பெற்றுய்ய ஸ்ரீ சுவாமிகள் திருவடி பணிகிறோம். கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி!

Saturday 27 July 2013

மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!

ஓம் குருவடி போற்றி!

குருவே சிவம் எனக்கூறும் வேதம்
குருவே சிவமெனக்கொள்வோர்க்கு
வருதுயர் யாவும் மலையாய்த்தோன்றி 
வடிவில் கடுகாய் விரைந்தோடும்!


சிவ பக்தி நெறியைத் தமிழகத்தில் பரவச்செய்து , அடியார்கள் பலரை சிவத் தொண்டில் ஈடுபடுத்தி,அவர்தம் பிறவிக்கடன் செவ்வனே நிறைவேறச் செய்து, அவர்கள் வாழ்வில் அறமும்,சிவனருட் கடாட்சமும் பெறச் செய்த அருளாளர் , மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!




குருவின் திருவடி சரணம்!